ஆண்களின் அழகைக் கெடுக்கும் முகப்பருவா?

முகப்பரு: 

12 வயதை கடக்கும் ஆண், பெண் இருவருக்குமே பருக்கள் பிரச்சனை உண்டாவது இயல்பு தான். ஆண்களுக்கு முகப்பரு வரும் போதே அதை கவனிக்காவிட்டால் அவை முகம் முழுக்க பரவி  தழும்புகளாக, பள்ளமாகமாக, வடுக்களாக உண்டாகிவிடுகிறது. அதிகப்படியாக வெயிலில் செல்லும் போது சுற்றுச் சூழலின் காரணமாக முகத்தில் படியும் அழுக்கு, உணவு பழக்கவழக்கங்கள், ஹார்மோன் மாற்றங்கள், உடல் ஆரோக்கிய குறைபாடு என பல பிரச்சினைகள் உண்டு. என்றாலும், உரிய முறையில் கவனம் செலுத்தாவிட்டால் அவை அதிகப்படியான வடுக்களாக உண்டாகி முகத்தின் அழகையே கெடுத்துவிடுகின்றன. வீட்டிலேயே இருக்கும் பொருட்களை கொண்டு பராமரிக்க செய்தாலே முகத்தில் பரு வில் இருந்து பாதுகாக்கலாம்.

ஐஸ் மசாஜ்: 

முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி சருமத்தை புத்துணர்ச்சியாக எப்பொழுதும் வைத்துக்கொள்ளும் ஐஸ் கட்டியை முகத்தில் வைத்து மசாஜ் போல் செய்ய வேண்டும். கீழிருந்து மேல்நோக்கி முகத்தின் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்து முடித்ததும் உடனடியாக முகத்தை துடைக்க வேண்டாம். ஒரு பத்து நிமிடங்கள் கழித்து மெல்லிய துணியால் ஒற்றி எடுக்கவும். ஆனால் மசாஜ் செய்வதற்கு முன்பே முகத்தை சுத்தமான நீரில் கழுவ மறந்து விட வேண்டாம். பருக்களால் வீக்கங்கள், சிறு கட்டிகள், கொப்பளங்கள் தோன்றி மறையும் வரையும் உண்டாகாது. எண்ணெய் சருமத்திற்கும் ஏற்ற மசாஜ் என்பதால் பருக்கள் அதிகரிக்கவும் செய்யாது.


பூண்டு: 

பூண்டு மிகவும் கார தன்மையையும், நாற்றமும் கொண்டிருக்கும். பருக்களை வேரோடு அகற்ற இவைதான் நல்ல ஒரு மருந்தாகும். மறைந்தாலும் அந்த இடத்தில் தழும்புகளையும் வடுக்களையும் உண்டாகாமல் இருக்க பூண்டு சாறு சிறந்த தீர்வாக இருக்கும். பூண்டில்  இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் கிருமிகளை அழிக்கிறது. பூண்டை நசுக்கி சாறெடுத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி வரவேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை மிதமான நீரில் கழுவித் துடைக்கவும். பருக்களும் அதிகமாக இருக்கும் போது பூண்டு சாறு எரிச்சலைக் கொடுக்கும். இது அதிகமாக இருந்தால் சோற்றுக்கற்றாழையின் போன்ற சாறுடன் சமமாக கலந்து தடவலாம். இப்படி செய்தால் எரிச்சலை உண்டாக்காமல் இருக்கும். பருக்கள் இருப்பவர்கள் இரண்டு நாளைக்கு ஒருமுறை செய்யலாம். மற்றவர்கள் வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதுமானது. 


தேனும் பாலும் புதினாவும்: 

சுத்தமான தேனின் பளபளப்பை அவள் முகத்தில் பார்க்க

தேன் - 3 டீஸ்பூன்

 பால் - 2 டீஸ்பூன்

புதினா சாறு -  2 டீஸ்பூன்

சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள். தேன் சருமத்தை வறட்சியில் இருந்து மீட்க உதவுகிறது. ஈரப்பசையை தக்க வைக்கவும் உதவும். அவசர கால நேரங்களில் அல்லது காலை வேளையில் வெளியில் செல்லும் போது வெறும் தேன் பயன்படுத்தி முகத்திற்கு மசாஜ் செய்யலாம். அல்லது இந்த மூன்றையும் கலந்து முகத்துக்கு கழுத்துக்கு மசாஜ் செய்து முகத்தை கழுவலாம். புதினா நல்ல மனம் மட்டுமல்ல பருக்களை விரட்டி அடிப்பதில், சருமத்திற்கு புத்துணர்வு தருவதிலும், கூட சிறப்பாக உதவுகிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த மூன்றையும் ஒன்று சேர கலந்து பயன்படுத்தி பாருங்கள் முகம் பளபளக்கும்.


பேக்கிங் சோடா: 

சருமத்தில் இருக்கும் பிஹெச் அளவு சமமாக இருந்தால்தான் பருக்கள் அதிகரிக்காது. இவை நம் சருமத்தின் அமிலத்தன்மையை சீராக்குகிறது. பருக்கள் அதிகரித்து வருவதால் தழும்புகளும் வடுக்களும் இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள் அதை நன்றாக கலக்கி முகத்தில் பருக்கள் இருக்கும் இடத்தில் மட்டும் சேர்த்து லேசாக தேய்த்து வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் காணாமல் போய்விடும். உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது பேக்கிங் சோடாவுடன், எலுமிச்சை சாறு, ஒன்றிரண்டாக பொடித்த ஓட்ஸ் கலந்து சருமத்தை மிருதுவாக ஸ்க்ரப் செய்யலாம். இவை முகத்தை பளிச்சென்றும் பளபளப்பாகவும் வைக்கும்.


ஆப்பிள் சீடர் வினிகர்:

ஆப்பிள் சீடர் வினிகர் பெரும்பாலானோர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். உடலுக்கு மிகவும் நன்மை ஏற்படுத்தும் சிறப்பான பலனைத் தருகிறது. ஒரு ஸ்பூன் எடுத்து ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். சுத்தமான காட்டன் எடுத்து  பிறகு முகத்தை அழுத்தித் துடைத்து எடுக்கவும். இப்படி செய்து வந்தால் சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை போக்க உதவும். முகத்தின் துவாரங்களில் அடைந்து இருக்கும் அழுக்குகள் வெளியேறி சருமத் துளைகள் திறக்கும். முகத்தை பளிச்சென்று வைப்பதற்கு உதவுகிறது. வாரத்திற்கு மூன்று நாட்களாவது இதை செய்யுங்கள். அப்படி செய்தால் பருக்கள் மறையும். அதோடு பருக்களை வர விடாமலும் தடுக்கும்.


தயிரும், அழகு தரும் மாவும்

நம்முடைய முகத்தை அழுக்கில்லாமல் பளிச் தோற்றத்தை கொடுக்க தயிர் உதவுகிறது. தயிருடன் 5 டீஸ்பூன் மாவு கலந்து பேக் போட்டு வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும். கடலை மாவு, பாசிப்பருப்பு மாவு முகத்திற்கு குளியல் பொடி என்று அழகுக்கு பயன்படுத்தக்கூடிய மாவுப் பொருட்களில் மஞ்சள் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இது முகத்தில் கலந்து ஃபேஸ் பேக் போட்டு 30 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவி வந்தால் முகத்தில் உண்டாகும் சரும பிரச்சனைகள் நீங்கும். பொதுவாகவே பெண்கள் பயன்படுத்தும் முறையை நீங்கள் பயன்படுத்தலாம். பெண்கள் அளவுக்கு பொறுமையை கடைபிடிக்க சாத்தியம் குறைவு என்பதால் தான் எளிய பொருட்களை கொண்டு பருக்களை விரட்டி அடிக்கும் வழிமுறைகளை கொடுத்திருக்கிறோம்.


முகம் வறட்சியாகவும் அதிக எண்ணெய் பசையோடு இருந்தாலும் முகத்தில் பருக்கள் அதிகரித்து இருக்கும். பருக்கள் தழும்புகள் முகத்தில் இருந்தாலும் இதைச் செய்து வந்தாலே போதும். வாரத்திற்கு மூன்று முறை இதைச் செய்து வந்தால் சருமத்தில் பருக்கள் தொல்லையில் இருந்து பாதுகாக்கலாம். முகத்தை பலபலவென்று வைத்துக்கொள்ளலாம். எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று முகத்தை சுத்தமாக வைத்திருங்கள். எப்பொழுதும் சுத்தமான நீரில் முகத்தை கழுவுங்கள். போதுமான நீர் குடிப்பது மிகவும் அவசியம்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


tag: how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil