அரிசி கழுவிய நீரை பயன்படுத்தினால் முகம் இன்னும் அழகாக மாறும் உங்களுக்கு தெரியுமா?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களையும் பட்ஜெட்டுக்குள் அடக்கிவிடும். பெண்களின் அழகுக்கு தனியாக ஒரு தொகை அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது. வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு அதிலும் வெளியேற்றும் பொருட்களை கொண்டு முகத்தை அழகாக்கும் என்கிறார்கள் இயற்கை அழகு பராமரிப்பு நிபுணர்கள். அழகு சாதன பொருட்களில் பலருக்கும் மேலைநாட்டு பொருட்களின் மீது அளவுக்கதிகமான மோகம் உண்டு. ஆனால் அந்த வெளிநாட்டு பெண்களே  இயற்கை அழகின் மீது மோகம் கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் அழகுக்காக பயன்படுத்தும் பொருள்கள் எல்லாமே இயற்கை பொருட்கள் தான். அப்படி அவர்கள் பயன்படுத்தும் பொருள்தான் அன்றாடம் நாம் உணவு சமைக்கும் பிரதான பொருளான அரிசி தான். அழகுக்கு பலரும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அரிசி கழுவிய நீர்: 

தினமும் உணவிற்கு பயன்படுத்தும் அரிசியில் கழுவிய பிறகு அந்த தண்ணியை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த நீரை வீணாக கீழே இதை வீணாக்காமல் காய்கறித் தோட்டத்திற்கு பயன்படுத்துவார்கள். மேலும் சிலர் வாழைக்காய், வாழைத்தண்டு அலசுவதற்கு அந்த நீரை பயன்படுத்திக் கொள்வார்கள். மேல்நாடுகளில் இந்த நீரை முகத்திற்கும், கூந்தலுக்கு பயன்படுத்தினால் சருமத்தின் அழகுக்கும்  இந்த நீரை பயன்படுத்துகிறார்கள். அதிகப்படியான நன்மைகளைத் தருகிறது. முக்கியமாக ஜப்பானில் காலம் காலமாக அரிசி கழுவிய நீரைக் கொண்டு தான் அவர்கள் கூந்தல் பராமரிப்புக்காக பயன்படுத்துகிறார்கள்  வரலாறு தெரிவிக்கிறது. அரிசி கழுவிய நீரில் அப்படி என்னதான் இருக்கு என்பதை தெரிந்து கொள்ளலாம். எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.


அரிசி கழுவிய நீரில் அப்படி என்னதான் சத்துக்கள் இருக்கு?

கூந்தலின் வளர்ச்சிக்கு உதவும் பொருட்களின் தயாரிப்பில் அதிக பலனைத் தருகின்றது என்பது குறித்து ஆய்வுகள்.  அந்த அரிசி கழுவிய நீரில் இருக்கும் இனோசிட்டால் முடி சேதம் அடைவதை சரிசெய்து முடியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அரிசி கழுவிய நீரில் ஸ்டார்ச் ஆனது கூந்தலின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள். இந்த நீரில் அமினோ அமிலங்களும், ஊட்டச் சத்துக்களும் நிறைந்திருப்பதால் தான் இவை சருமத்திற்கும் அதிகப்படியான நன்மைகளைத் தருகின்றன. எளிதாக கிடைக்கக்கூடிய இந்த நீரை கொண்டு சருமத்திற்கு எப்படி பராமரிப்பு செய்யலாம் என்று பார்ப்போம்.


சருமம்:

அரிசி கழுவிய நீரை வடித்து 2 மணி நேரம் வைத்திருந்தால் தண்ணீர் மேலாக வந்திருக்கும். இப்போது தண்ணீரை மட்டும் வடிகட்டி அதை பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள் முகம் சோர்வாக இருக்கும்போது இதை முகத்துக்கு ஸ்பிரே செய்து கொள்ளுங்கள். இந்த நீரில் இருக்கும் சத்துக்கள் சருமத் தின் மூன்று அடுக்குகளிலும் சென்று சருமத்தை சுத்தம் செய்துவிடுகிறது. சருமத்தை தளராமல் செய்யவும் அதை இறுக்கமாகவும் வைத்திருக்கிறது. இதனால் முகத்தில் வயது கூடாது. சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும். சருமத்தின் நிறத்தை ஏற்படுத்த அது சருமத்தில் சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க உதவுகிறது. சருமத்தில் எந்த விதமான ஆதாரங்களும் இல்லாமல் இந்த அரிசி கழுவிய நீரை பயன்படுத்தினால் முகம் பளபளக்கும். மேலும் அதிகப்படியான நீரை சேமித்து வைத்திருப்பதால் அதை கொண்டு முகத்தை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் இன்னும் அதிகமான பலன் கிடைக்கிறது.

கூந்தலுக்கு அரசி நீரை எப்படி பயன்படுத்துவது?

கூந்தலுக்கு அரிசி கழுவிய நீர் பயன்படுத்தும் போது அரிசியை ஊறவைத்து குறைந்தது 7 மணி நேரமாவது ஊற விடுங்கள். பிறகு அந்த மேலான நீரை வடித்து விடுங்கள். தலைக்கு ஷாம்பு அல்லது சீயக்காய் போட்ட பின்பு அந்த நீரை தலை முழுவதும் மயிர்க்கால்களில் முதல் நுனி வரை தடவி 10 நிமிடங்கள் ஊறவிடுங்கள். இதன் பிறகு இந்த நீரைக் கொண்டு கூந்தலை அலசுங்கள். மீண்டும் பத்து நிமிடம் கழித்து கூந்தலை சுத்தமான நீரில் அலசிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை குளிக்கும் போதும் இதுபோன்று கூந்தலுக்கு அரிசியை நீரை பயன்படுத்தி வந்தால் கூந்தலின் வளர்ச்சி மிகவும் அமோகமாக இருக்கும். கூந்தலுக்கு போஷாக்கு பொலிவும் கிடைக்கும். முடி உதிர்வு, நுனி வெடிப்பு, வறட்சி போன்ற எந்த பிரச்சினைகள் வராமலும் தடுக்கும்.


சருமத்திற்கும், கூந்தலுக்கும் அழகை உறுதி செய்யும். சரும பிரச்சனைகள் வராமல் தடுப்பதாகவும் கூட கூறுகின்றது. சருமத்தில் பிரச்சனை இருப்பவர்கள் குளிக்கும்போது அரிசி கழுவிய நீரை கொண்டு தேய்த்து குளித்து வந்தால் சருமத்தில் எந்த பிரச்சினைகள் இருந்தாலும் போய்விடும். விலை  கொடுத்து பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் சருமத்திற்கு கொடுப்பது தற்காலிக அழகு மட்டும் தான். அதிலும் சில சமயங்களில் அலர்ஜி போன்ற பல பிரச்சினைகளை உருவாக்கும் வாய்ப்புண்டு. இயற்கைப் பொருள்களில் அழகு  நிறைந்திருக்கும் போது அதை பயன்படுத்துவதுதான் மிகவும் சிறப்பு.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


tag: how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil