சிறுத்தை சிவா தம்பி 'பாலாவிற்கு' டாக்டர் பட்டம்!
நடிகர் பாலா 2002ஆம் ஆண்டு 'அன்பு' என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர்.பின்னர் காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், வீரம் உட்பட சில படங்களில் நடித்தார். நடிகர் பாலா இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார், மலையாள திரையுலகிலும் பிசியான நடிகராக இருக்கிறார்.இயக்குநர் சிவா ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் எனப் பல பணிகளை கொண்டவர். கார்த்தியின் சிறுத்தை திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்றதால், சிறுத்தை சிவா என்று இவர் அழைக்கப்படுகிறார்.
அஜித் குமார் நடிப்பில் இயக்குநர் சிவா இயக்கிய 'வீரம்' திரைப்படமும் வெற்றித் திரைப்படமானது.இதன்பின் இவர் மீண்டும் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து பணியாற்றிய 'வேதாளம்' திரைப்படமானது, 2015 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியானது. மூன்றாவது முறையாக அஜித்குமார் மற்றும் சிவா கூட்டணியில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான 'விவேகம்' திரைப்படத்திற்கு பல்வேறு விதமான விமர்சனம் பெற்றபோதிலும் நல்ல வருவாய் ஈட்டித்தந்தது என்பதில் ஐயமில்லை.
சிவா இயக்கிய 'வீரம்' படத்தில்,நடிகர் பாலா, நடிகர் அஜித்திற்கு, தம்பியாக நடித்து பிரபலமானார்.பாலா இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ராயல் அமெரிக்கன் பல்கலைக்கழகம் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.ஒவ்வொருவருக்கும் அவரவர் துறைகளில் செய்த சாதனை மற்றும் சேவைகளை மையப்படுத்தியே கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம்.
நடிகர் பாலா கலைத்துறையை சேர்ந்தவர்.ஆயினும்,அவருக்கு மனிதாபிமானமிக்க செயல்பாடுகள் என்கிற பிரிவில் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.கடந்த பல வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் பாலா, தனது ‘நடிகர் பாலா தொண்டு நிறுவனம்' மூலமாக பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகிறார்.குறிப்பாக இந்த கொரோனா தாக்கம் ஏற்பட்ட காலகட்டத்தில் சுமார் 250 குடும்பங்களைத் தத்தெடுத்துள்ளார்.
அது மட்டுமல்லாது வரும் 24ஆம் தேதி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன்,பாலாவை கவுரவிக்க உள்ளார்.இந்த டாக்டர் பட்டம் கிடைத்தது பற்றி பாலா கூறுகையில், "யாருமே நூறு வயது வரை வாழப்போவது கிடையாது. நாலு பேருக்கு நம்மால் நல்லது செய்ய முடியும் என்பதற்கு எனக்கு கிடைத்துள்ள பெரிய அங்கீகாரமாக இதை எடுத்து கொள்கிறேன்.இப்போது என் பொறுப்பு இன்னும் கூடுதலாகி இருப்பதாக நினைக்கிறேன்.
முன்னைவிட இன்னும் முழு வீச்சில் எனது சமூக சேவைகள் தொடரும் என்றும் மேலும் இதை பார்க்கும்போது இதுபோன்று மனிதாபிமானத்துடன் உதவி செய்ய நினைக்கும் பலருக்கும் இது உத்வேகம் தருவதாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.இந்த கவுரவ டாக்டர் பட்டம் இதற்கு முன்பு வட இந்தியாவில் ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.தென்னிந்தியாவில் தற்போது நடிகர் பாலாவுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ,போட்டோக்கள்,விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள்,சமையல் குறிப்புகள்,அழகு குறிப்பு,தமிழகம்,இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.