கமல்ஹாசன் நலமாக இருப்பதாக ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்!

கமல்ஹாசன் உடல்நலம் குறித்து ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்,தன் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும்,சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் பணிகளை தொடங்குவேன் என்றும் கூறியிருந்தார்.சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தலைவர் கமல் ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.ஒருபுறம் பிக்பாஸ், மறுபுறம் தேர்தல் பிரச்சாரம் என இரண்டுபுறமும் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்த கையோடு கமல் ஹாசன் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது.

காலில் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால், தற்காலிகமாக ஓய்வில் செல்ல இருப்பதாக, கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.மருத்துவர்கள் ஓய்வு தேவை என அறிவுறுத்தி இருந்தனர். எனவும்,அதை மீறித்தான் சினிமா வேலைகளும் அரசியல் வேலைகளும் தொடர்ந்ததாகவும் கூறி இருந்தார்.பிரச்சாரத்தைத் ஆரம்பிக்கும் போதே காலில் நல்ல வலி இருந்தது என்றும் மக்களின் அன்பே அதற்கு மருந்தாக அமைந்ததாகவும் கூறினார்.அதுமட்டுமல்லாது அவருக்கு தற்போது சிறிய ஓய்வு கிடைத்திருக்கிறது.ஆகவே,காலில் ஒரு சிறு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன்.அதுவரையில் இணையம் வழியாகவும் வீடியோக்கள் வழியாகவும் பேசுவேன் என்று தெரிவித்தார்.


மற்றும் அவர்,தமிழகத்தை தலை நிமிரச் செய்த ‘சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார்.ஐந்து பாகங்களாக ஐந்தாயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து தமிழ் மக்களைச் சந்தித்திருக்கிறேன்.மாற்றத்துக்கான மக்கள் எழுச்சியைக் கண்ணாரக் கண்டு திரும்பியிருக்கிறேன்.அதுபோலவே கொரோனா பொது முடக்கத்தின்போது தொடங்கிய ‘பிக்பாஸ் - சீசன் 4’ தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக முடித்திருக்கிறேன். இதுவும் மக்களுடனான பயணம்தான்.நான்கரை கோடி தமிழர்களோடு வாராவாரம் உரையாடியதும் உறவாடியதும் மகிழ்ச்சியூட்டுகிறது என்று தெரிவித்திருந்தார்.

தற்போதைய நிலையில் இன்று நடிகர் கமல் ஹாசனுக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.இதுகுறித்து அவரின் மகள்கள் ஸ்ருதி ஹாசன்,அக்‌ஷரா ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அந்த அறிக்கையில்,“இன்று காலையில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில், மருத்துவர் திரு.ஜே எஸ்.என்.மூர்த்தி அவர்களது ஒருங்கிணைப்பில், எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் திரு மோகன்குமார் தலைமையில் எங்கள் அப்பாவிற்கு காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார்.


அப்பாவை மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் மருத்துவமனை நிர்வாகமும் நல்ல முறையில் பார்த்துக்கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்குப் பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களைச் சந்திப்பார்,மகிழ்விப்பார் அனைவரது அன்பிற்கும் பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுருந்தனர்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tags:  latest news | trending news |  celebrity news in Tamil | daily updates |  cinema news in Tamil | interesting news in Tamil |  famous updates | trending topics | recent updates | popular topics | cinema updates | kamalhasan updates | shruthihasan updates |