டைரக்டர் மணிரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கும் யோகி பாபு!!!

யோகிபாபு ஹீரோவாக நடிக்க இருக்கும் திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடபட்டிற்கும் இந்நிலையில் ஓடிடிக்காக சில முன்னணி இயக்குநர்கள் ஆந்தாலஜி திரைப்படங்களை இயக்குகின்றனர்.இதற்கு முன் கார்த்திக் சுப்புராஜ் , கெளதம் மேனன் ,சுதா கொங்கரா,ராஜீவ் மேனன் ,சுஹாசினி சேர்ந்து ‘புத்தம் புதுக்காலை’ என்ற ஆந்தாலஜி படத்தை இயக்கி இருந்தார்கள்.அதன் பின் வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் கவுதம் மேனன் இணைந்து பாவக்கதைகள் படத்தை இயக்கியிருந்தார்கள்.

இந்நிலையில் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கிறார். இத்திரைப்படத்தை இயக்குநர்கள் மணிரத்னம், ஜெயேந்திரா இருவரும் தயாரித்து வருகின்றனர். ஜஸ்ட் டிக்கெட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் ஏபி இண்டர்நேஷனல், ஆங்கிள் க்ரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் நிர்வாகத் தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.சந்தோஷ் சிவன், பாலசுப்பிரமணியன், மனோஜ் பரஹம்சா, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா உள்ளிட்டோர் இதன் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றுகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான், ஜிப்ரான், இமான், கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகரன், அருள்தேவ், கார்த்திக், ரோன் எத்தன் யோஹான் ஆகியோர் இசையமைப்பாளர்களாக பணிபுரிகின்றனர்.


மட்டமல்லாது,அரவிந்த் சுவாமி,பிஜாய் நம்பியார்,கெளதம் வாசுதேவ் மேனன்,ஹலிதா ஷமீம், கே.வி. ஆனந்த்,கார்த்திக் நரேன்,கார்த்திக் சுப்பராஜ்,பொன்ராம்,ரதிந்திரன் ஆர்.பிரசாத் ஆகியோர் இயக்குவதாக் அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது இதில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இயக்குநர் பொன்ராமுக்கு பதிலாக, தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரியதர்ஷன் இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்ததிருகிக்கிறார்.அவர் இயக்கும் கதையில் ஹீரோவாக யோகி பாபு நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் யோகி பாபு, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நகைச்சுவை தொடரான "லொள்ளு சபா" தொடரில் சிறு வேடங்களில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இவர் தமிழ் சினிமாவில் ஒரு எழுத்தாளராக இரண்டு வருடங்கள் பயணத்தை தொடங்கினார். வெள்ளித்திரையில் யோகி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இப்படத்திற்கு பின்னர் இவர் தனது பாபு என்னும் பெயரினை யோகி பாபு என தமிழ் திரைத்துறையில் மாற்றியிருக்கிறார்.


இவர், பின்பு பையா திரைப்படத்தில் மும்பை ரௌடிகளில் ஒருவராகவும், இயக்குனர் சுந்தர் சி யின் கலகலப்பு திரைப்படத்தில் பிம்ப் ஏன்னும் கதாபாத்திரத்திலும்,வேலாயுதம் திரைப்படத்தில் ஒரு கிராமத்து வாசியாகவும்,பின் அட்டகத்தி,சூது கவ்வும்,பட்டத்து யானை என பல தமிழ் படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார்.தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை நடிகராக நடித்து இருக்கிறார் யோகி பாபு. தற்போது அவர் இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


Tags: latest news | trending news |  celebrity news in Tamil | daily updates |  cinema news in Tamil | interesting news in Tamil |  famous updates | trending topics | manirathnam updates | popular topics | cinema updates | yogibabu movie updates | recent updates