எளிதாக கிடைக்கும் பழங்களை வைத்து ஃபேஸ் பேக் போடலாமா?

விலை உயர்ந்த பழங்கள் தான் சருமத்திற்கு அதிக பளபளப்பை தரும் என்று பல பேர் நினைக்கிறார்கள். கிவி, அவகாடோ, பீச், ப்ளூபெர்ரி போன்றவை விலை உயர்ந்த பழங்கள். இப்படிப்பட்ட பழங்களை கொண்டு ஃபேஸ் பேக் போட்டால் மட்டும் தான் அழகாக காட்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள். நமக்கு கிடைக்கும் இங்த பழங்களை வைத்து தான் நாம் சருமத்தை அழகுபடுத்திக் கொள்ளலாம். சொல்லப்போனால் அந்த விலை உயர்ந்த பழங்கள் காட்டிலும் இயற்கையாக கிடைக்கும் பழங்கள் தான் இன்னும் அதிகமாக அழகைத் தருகின்றன. அப்படிப்பட்ட பழங்களை கொண்டு நாம் தயாரிக்கும் ஃபேஸ் பேக் பற்றி பார்ப்போம்.

வாழைப்பழம் ஃபேஸ் பேக்:

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - நன்றாக பழுத்த பழமாக இருக்க வேண்டும்.

தேன்- 2 ஸ்பூன்( சுத்தமானதாக இருக்க வேண்டும்.)

எலுமிச்சை பழம் - சிறிதளவு சாறு மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்

பயன்படுத்தும் முறை:

வாழைப் பழத்தை நன்கு மசித்துக் கொள்ளுங்கள். இறுதியாக தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளுங்கள். மீண்டும் ஒரு சுற்று சுற்றி மசித்துக் கொள்ளுங்கள். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் முழுவதுமாக தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்து முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் போதும். முகம் பளிச் தோற்றத்துடன் இருக்கும். பழங்களில் விலை மலிவான பழம் என்றால் அது வாழைப்பழம் மட்டும்தான். எளிதாக கிடைக்கக்கூடிய பழமும் கூட. எப்போதுமே சருமத்திற்கு எந்த தீங்கும் பக்கவிளைவும் இல்லாத  பழம் என்றால் இதுதான்.


பப்பாளிப்பழம் ஃபேஸ் பேக்:

இயற்கையாகவே கிடைக்கக்கூடிய பொருட்களில் பப்பாளி பழமும் ஒன்று. இது சிறந்த சுவாச கருவியாகவும் உள்ளது. சருமத்தை எப்போதும் பிரஷ்ஷாக வைத்திருக்கக் கூடிய முக்கியமான பண்புகள் இதற்கு உண்டு. பப்பாளி பழ ஃபேஸ் பேக் பற்றி ஏற்கனவே அனைவரும் பார்த்திருப்போம் என்றாலும், இதனோடு எந்த பொருட்களையும் சேர்க்காமல் இதை மட்டுமே பயன்படுத்தலாம். நன்றாக பழுத்த பப்பாளிப் பழத்தில் 2 ஸ்பூன் கொண்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் அதில் குளிர்ச்சியை விரும்பினால் மட்டும் லேசாக பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம் அதிகம் இருக்கக் கூடாது அதற்கு மட்டும் இருந்தால் போதுமானது. இவை முகம் மற்றும் கழுத்துப் பகுதி முழுவதும் தடவி மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடங்கள் கழித்து இதமான நீரில் கழுவிக் கொள்ளுங்கள். சருமத்திற்கு வேண்டிய அனைத்து ஊட்டச்சத்துக்களும் இந்த பப்பாளிப்பழத்தில் கிடைத்துவிடும்.


திராட்சைப் பழ ஃபேஸ் பேக்:

திராட்சை பழத்தின் கொட்டையை நீக்கி கூல் போல் மசித்து அதை முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். துவாரங்கள் மற்றும் கண்களின் கீழ் வரும் போது மட்டும் கவனமாக இருந்து கொள்ளுங்கள். இது காயும்வரை வைத்திருந்து பிறகு குளிர்ந்த நீரில் அல்லது சாதாரண நீரில் கழுவிக் கொள்ளுங்கள். முகம் பிரகாசமாக இருக்கும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இந்த திராட்சைப் பழ ஃபேஸ் பேக் செய்தால் கூட போதுமானது.


ஆப்பிள் ஆரஞ்சு ஃபேஸ் பேக்:

சருமத்தில் ஏதேனும் தொற்று இருந்தால், சரும பிரச்சனைகள் இருந்தால், சரும அழகை மேம்படுத்த இதை பயன்படுத்தலாம். ஆப்பிலும் எல்லா காலங்களிலும் எளிதாக கிடைக்கக் கூடிய பழங்களுள் ஒன்றாகும். அவை சருமத்தில் இருக்கும் மிக அதிக நன்மை தரக்கூடிய ஒரு பழமாகும். ஆரஞ்சு, ஆப்பிள் (வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் இ) போன்ற போன்ற சத்துகளை கொண்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

ஆப்பிள்- பாதியளவு

ஆரஞ்சு சுளை

தேன் - 1 டீஸ்பூன்

மஞ்சள் - 1 சிட்டிகை

ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு இரண்டையும் கொட்டைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இறுதியாக அதில் தேன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் குழைத்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும். இது சரும பிரச்சனை எதுவாக இருந்தாலும் அனைத்தையும் படிப்படியாக போக்கிவிடும்.



மாதுளம் பழ ஃபேஸ் பேக்:

மாதுளம் பழத்தின் சாற்றை  மூலம் உதட்டின் நிறம் மேன்மை அடையும். இந்த மாதுளம்பழத்தை அனைத்து சருமத்தினரும் பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பாக உணர்திறன் அதிகமாகக் கொண்டிருக்கும் சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் பேக். இது மாதுளை சருமத்தை மிகவும் ப்ரெஷாக வைக்க செய்யும். குறிப்பாக வயதான தோற்றத்தை எதிர்க்கும் பண்புகளை கொண்டிருக்கிறது. மாதுளை முத்துக்களை அரைத்து முகத்தில் தடவி பேக் போட்டால் முகத்தில் இருக்கும் அனைத்து இறந்த செல்களும் வெளியேறும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை நீரில் கழுவி எடுக்கவும். பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தினால் நல்ல பலன் கொடுக்கும்.


தர்ப்பூசணி ஃபேஸ் பேக்:

கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் பழம் என்றாலும் சரியான பருவத்தில் கிடைக்கிறது. சருமம்  மந்தமும், வெப்பமும் கொண்டிருக்கும்.  விலை மலிவான பம் என்பதால் கிடைக்கும் போதெல்லாம் முகத்துக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதேபோன்று மாம்பழம் கிடைக்கும் போது முகத்திற்கு பயன்படுத்தினால் சருமம் ஜொலிப்பதை உணர்வீர்கள். தர் பூசணி விதைகளை நீக்கி விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து கூழாக்கிக் கொள்ளுங்கள். பிறகு முகத்தில் நன்றாக தடவி கொள்ளுங்கள். அதை முகத்தில் வடியும் கூட என்றாலும் மீண்டும் மீண்டும் தடவி அவை உலர்ந்த பிறகு முகத்தைக் கழுவுங்கள். இவை முகத்தை இயற்கையாக சுத்தம் செய்ய உதவுகிறது.


மேற்கொண்ட இந்த பழங்களைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால் முகம் பளபளப்பாக இருக்கும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


tag: how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil