இயற்கையாக முடி உதிர்தலைத் தடுக்க சில வழிமுறைகள்:

முடி உதிர்தல் என்பது சாதாரணமாக இயற்கையாகவே குணமடைந்து விடக்கூடிய பிரச்சினைதான். ஆனால் அது இயற்கையாக முடி உதிர்தல் ஆக இருந்தால் மட்டும் தான் சரியாகும்.  பொதுவாக ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடிகள் இயற்கையாக உதிரலாம்.  அதிகமான செயற்கை மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போதும், தைராய்டு பிரச்சினைஇருந்தாலும் அதிகமாக முடி உதிர்வது இருக்கும்.  உச்சந்தலையில் ஏதாவது நோய் இருந்தாலும் அல்லது கர்ப்ப காலங்களில் பிரசவத்திற்கு பிறகு முடிகொட்டுதலும் அதிகமாக இருந்தால் அது விரைவில் சரியாகி விடும். ஆனால் இந்த முடி உதிர்வு தொடர்ந்து நிற்காமல் கொட்டினால், அதற்கு வேறு ஏதோ பிரச்சினையாக இருக்கலாம். என்ன பிரச்சனை என்று கண்டறிந்தால் மட்டுமே முடி உதிர்வை தடுக்கலாம். 

இயற்கையான மசாஜ்:

கூந்தலில் மசாஜ் செய்ய ஏதாவது ஒரு எண்ணையை எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் என எது வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த எண்ணையை உங்களுக்கு தன்மைக்கேற்ப சூடு செய்யுங்கள். லேசான சூடு இருக்கும்போதே இறக்கிவிடுங்கள். மிதமான சூடு இருக்கும்போது அதை தலையில் தேய்த்து மசாஜ் பண்ணுங்கள். உங்களுக்கு கூந்தலுக்கு நீங்கள் செய்யும் இந்த மசாஜ் 20 முதல் 45 நிமிடங்கள் வரை செலவிட வேண்டும். கூந்தலின் வேர்ப்பகுதியில் இருந்து நுனி முடி வரை முழுவதும் எண்ணெய் தடவ வேண்டும்.


விரல்களைக் கொண்டு முடியின் இறுதிப் பகுதியிலிருந்து, நுனி பகுதி வரை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். கூந்தலின் இடுக்குகள் சொறிந்தபடி மென்மையான அழுத்தத்துடன் தேய்க்கவும். கூந்தலுக்கு மசாஜ் செய்தவுடன் சீப்பை கொண்டு மென்மையாக தலையை வாரவும். ஹேர் ஆயில் மசாஜ் செய்த உடன் தலைக்கு ஹேர் கவர் போட்டு 2 மணி நேரம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை குளிக்கவும். மாதத்தில் ஒரு முறையாவது கூந்தலுக்கு மசாஜ் செய்தால் ஊட்டம் கிடைக்கும் முடி உதிர்வு இருக்காது.

தியானம் பழகுங்கள்:

முழங்காலுக்கும், மொட்டைத்தலைக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். உண்மையாகவே நீங்கள் தியானம் செய்யும் பொழுது உங்கள் மனத அழுத்தம் குறைகிறது. முடி உதிர்தலுக்கு முக்கியமான காரணம் மன அழுத்தமும் பதற்றமும் தான்.

இதை செய்தால் முடி உதிர்வது நிச்சயமாக படிபடியாக நின்றுவிடும்.  தினமும் தியானம் செய்தால் ஹார்மோன்கள் சமநிலைப்படும், மனம் அமைதியாகும், மன அழுத்தம் குறையும். தியானம் செய்தால் உடலுக்கு  அதிக நன்மை கிடைக்கும்.

முடி உதிர்தல் அதிகமாக இருந்தால்:

முடி உதிர்தல் அதிகமாக இருந்தால் அதை தடுக்க இதோ ஒரு எளிய முறை. பூண்டுச் சாறு, சாம்பார் வெங்காயச் சாறு, இஞ்சி சாறு என ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு அதை மிக்ஸியில் அரைத்து அதனுடைய சாறை எடுத்துக் கொள்ளுங்கள்.  இரவு நேரத்தில் கூந்தலின் மயிர்கால்கள் பகுதியில் நன்றாக தடவி மசாஜ் செய்து ஊற விடுங்கள். மறுநாள் காலை வரை இது உங்கள் முடியில்  நன்றாக ஊறட்டும். பிறகு காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி உங்கள் கூந்தலை நன்றாக கழுவுங்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த முறையை பயன்படுத்துங்கள். இதை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்தலுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும்.


இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள், பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: hair growth how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil